சிதம்பரம்:
          சிதம்பரத்தை அடுத்த கோழிப்பள்ளம் கிராமத்தை அண்ணாமலை நகரில் உள்ள 4-வது  தமிழ்நாடு என்.சி.சி. பட்டாலியன் தேசிய மாணவர் படையினர் தத்தெடுத்து  பல்வேறு சேவைப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
          சிதம்பரம் ராமசாமி  செட்டியார் மேல்நிலைப் பள்ளி, அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல  என்.சி.சி. மாணவர்கள் சுமார் 60 பேர், என்.சி.சி. அதிகாரிகள்  ஜே.சுந்தரலிங்கம், சீமான், ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் கோழிப்பள்ளம்  கிராமத்தில் முகாமிட்டு சமுதாய சேவையை மேற்கொள்ளும் பணியை புதன்கிழமை  தொடங்கினர்.
            முதல்கட்டமாக கிராம மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு  வீடுகள் முன்பு நடப்பட்டன. முதியோர்களுக்கு எழுத, படிக்கவும்,  கையொப்பமிடவும் என்.சி.சி. மாணவர்கள் கற்றுக் கொடுத்தனர். புகையிலை  பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், சாலைப் பாதுகாப்பு விதிகள்,  மழைநீர் சேமிப்பின் அவசியம், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த கோஷங்களுடன்  மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணியும் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பார்மர், ராணுவ  அதிகாரிகள் பாலாஜி, தினேஷ்பாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக