உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 08, 2012

சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சிதம்பரம் மாணவி எழுதிய குரூம்மிங் இந்தியா புத்தகம்

சிதம்பரம்:

       சிதம்பரத்தைச் சேர்ந்த மாணவி எழுதிய குரூம்மிங் இந்தியா என்ற புத்தகம் புதுதில்லி சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டு இடம் பெற்றுள்ளது.சிதம்பரம் மாரியப்பா நகரில் வசிக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் மிஸ்ரா. இவரது மகள் சுருதி மிஸ்ரா (25).

            சிதம்பரம் நிர்மலா மெட்ரிக் பள்ளி, காமராஜ் சிறப்பு பள்ளி ஆகியவற்றில் பயின்றார். பின்னர் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பி.இ. எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன் பயின்று புதுதில்லி டாடா கன்சல்டன்சியில் சிறிது காலம் பணியாற்றியனார்.இந்நிலையில் இம்மாணவி இந்தியாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குரூம்மிங் இந்தியா என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். 7 பகுதிகளையும், 150 பக்கங்களையும் கொண்ட இப்புத்தகம் அண்மையில் புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியில் மகேஷ்வர் திரிபாதியால் வெளியிடப்பட்டது.

        இப் புத்தகத்தில் உள்ள கருத்துகள் இளைஞர்களுக்கும், இந்தியாவின் எதிர்காலத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கும் சிறந்த ஒரு கருத்துப் பெட்டகமாகும்.இவருடைய எழுத்துகள் சிந்தனையைத் தூண்டும் வகையில் உள்ளதால் புத்தகக் கண்காட்சியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.















0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior