உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 08, 2012

சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரிக்கு கூடுதல்பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சிதம்பரம்:
 
       சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவியர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
 
          சிதம்பரம் நகரில் நகராட்சிக்குச் சொந்தமான பகுதியில் கூரைக் கொட்டகையில் செயல்பட்டு வந்த அரசு கலைக் கல்லூரி கடந்த 1991-ம் ஆண்டு சிதம்பரம் அருகே 5 கிலோ மீட்டர் தொலைவில் சி.முட்லூர் பகுதியில் அரசு கலைக் கல்லூரிக்குச் சொந்தமாக புதிய கட்டடம் கட்டப்பட்டு அங்கு மாற்றம் செய்யப்பட்டது.இக்கல்லூரிக்கு சிதம்பரத்திலிருந்து மாணவ, மாணவியர் சென்று, வரும் வகையில் கல்லூரி நேரத்தில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
 
       கல்லூரிக்கு வரும் பஸ்ஸில் மாணவ, மாணவியர் படிக்கட்டில் தொற்றிக் கொண்டு செல்லும் நிலை உள்ளது.குறிப்பாக சிதம்பரத்திலிருந்து செல்லும் மாணவர்கள் 5 கி.மீ. தூரம் கல்லூரிக்கு நடந்துச் சென்று வரும் நிலை உள்ளது .எனவே அரசு போக்குவரத்துக் கழகம் சிதம்பரத்திலிருந்து சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி வழியாக பரங்கிப்பேட்டை வரை கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் சிதம்பரம் நகரில் அரசு மகளிர் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior