உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 17, 2009

ஜன​வரி 15 முதல் பய​ணி​கள் ரயில்

சிதம்​ப​ரம்,​​ டிச.​ 16:​ 

                   மயி​லா​டு​துறை-​ விழுப்​பு​ரம் இடையே அகல ரயில்​பாதை அமைக்​கும் பணி முடி​வு​றும் தரு​வா​யில் உள்​ளது.​ வியா​ழக்​கி​ழமை முதல் ​(டிசம்​பர் 17) சரக்கு ரயில்​கள் இயக்​கப்​ப​டும் என்​றும்,​​ ஜன​வரி.15-ம் தேதி முதல் பய​ணி​கள் ரயில்​கள் இயக்​கப்​ப​டும் என தென்​னக ரயில்வே நிர்​வா​கம் அறி​வித்​துள்​ளது.​ இத​னி​டையே,​​ மயி​லா​டு​துறை-​விழுப்​பு​ரம் இடையே புதன்​கி​ழமை 60 கி.மீ.​ வேகத்​தில் 2 பெட்​டி​கள் கொண்ட சோதனை ஓட்ட ரயில் இயக்​கப்​பட்​டது.​ திருச்சி கோட்ட கூடு​தல் ரயில்வே மேலா​ளர் செல்​வ​ராஜ் தலை​மை​யி​லான குழு​வி​னர் இந்த வேக சோதனை ஓட்ட ஆய்வை மேற்​கொண்​ட​னர்.​

                   மீட்​டர்​கேஜ் பாதை அகற்றி அகல ரயில்​பாதை அமைக்க மயி​லா​டு​துறை-​ விழுப்​பு​ரம் இடையே ஜன​வரி 2006-ம் ஆண்டு ரயில்​கள் நிறுத்​தப்​பட்​டது.​ தற்​போது வியா​ழக்​கி​ழமை முதல் சரக்கு ரயில்​கள் இயக்​கப்​ப​டு​வ​தால் கட​லூர்,​​ விழுப்​பு​ரம்,​​ நாகை மாவட்ட மக்​கள் மகிழ்ச்​சி​ய​டைந்​துள்​ளர்.​ மேலும்,​​ உட​ன​டி​யாக பொது​மக்​கள் நலன் கருதி மயி​லா​டு​துறை-​ விழுப்​பு​ரம் இடையே பாசஞ்​சர் ரயில்​களை இயக்க ரயில்வே நிர்​வா​கம் நட​வ​டிக்கை மேற்​கொள்ள வேண்​டுóம்.​ எக்ஸ்​பி​ரஸ் ரயில்​களை ஜன.15 முதல் இயக்​க​லாம் என தமிழ்​நாடு நுகர்​வோர் குழு​மச் செய​லா​ளர் சி.டி.அப்​பாவு திருச்சி கோட்ட மேலா​ள​ருக்கு கோரிக்கை விடுத்​துள்​ளார்.​மாண​வர்​க​ளுக்கு தனி முன்​ப​திவு கவுண்​டர் அமைக்க கோரிக்கை:​ சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் பல்​வேறு மாநி​லங்​க​ளைச் சேர்ந்த மாணவ,​​ மாண​வி​யர்​கள் சுமார் 1500க்கும் மேற்​பட்​டோர் பயி​லு​கின்​ற​னர்.​ இவை​யல்​லா​மல் தமி​ழ​கத்​தில் பல்​வேறு மாவட்​டங்​க​ளைச் சேர்ந்த மாண​வர்​க​ளும் பயி​லு​கின்​ற​னர்.​ இவர்​கள் ரயில்​நி​லை​யத்​தில் டிக்​கட் முன்​ப​திவு செய்ய நீண்ட கியூ வரி​சை​யில் நிற்​ப​தால் உள்​ளூர் மக்​கள் முன்​ப​திவு செய்ய முடி​ய​வில்லை.​ என மாண​வர்​க​ளுக்கு என தனி முன்​ப​திவு கவுண்​டர் திறக்க வேண்​டும் என பொது​ந​லத் தொண்​டர் வே.கலி​ய​மூர்த்தி கோரிக்கை விடுத்​துள்​ளார்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior