உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 17, 2009

பட்​ட​தாரி ஆசி​ரி​யர்​க​ளுக்கு கணினி பயிற்சி

விருத்தா​ச​லம்,​​ ​ டிச.16:​ 

                    விருத்​தா​ச​லத்​தில் அனை​வ​ருக்​கும் கல்வி திட்​டத்​தின்​கீழ் பட்​ட​தாரி ஆசி​ரி​யர்​க​ளுக்கு அடிப்​படை கணினி பயிற்சி திங்​கள்​கி​ழமை தொடங்​கி​யது.​

                 வி​ருத்​தா​ச​லம் கல்வி மாவட்​டத்​தின் சார்​பாக அனை​வ​ருக்​கும் இடை​நி​லைக் கல்​வித் திட்​டத்​தின்​கீழ் 9,​ 10-ம் வகுப்பு பட்​ட​தாரி ஆசி​ரி​யர்​கள் 120 பேருக்கு,​விருத்​தா​ச​லம் பாத்​திமா மெட்​ரிக் பள்ளி உட்​பட மூன்று மையங்​க​ளில் அடிப்​படை கணினி பயிற்சி திங்​கள்​கி​ழமை முதல் 5 நாள்​க​ளுக்கு நடை​பெ​று​கி​றது.​ ​

                      வி​ருத்​தா​ச​லம் பாத்​திமா மெட்​ரிக் பள்​ளி​யில் நடை​பெ​றும் செய்​முறை பயிற்​சியை அப்​பள்ளி முதல்​வர் அருள்​மேரி தொடங்கி வைத்​தார்.​ இப்​பள்​ளி​யில் 48 ஆசி​ரி​யர்​கள் பயிற்சி பெற்று வரு​கின்​ற​னர்.​ பெ​ரிய நெச​ளூர் பள்ளி தலைமை ஆசி​ரி​யர் இளங்​கோ​வன் விருத்​தா​ச​லம் கல்வி மாவட்ட,​​ திட்ட ஒருங்​கி​ணைப்​பா​ள​ரா​க​வும்,​இப்​ப​யிற்​சி​யின் நோக்​கம் பற்றி மாநில அள​வில் பயிற்சி பெற்று வந்த கணினி ஆசி​ரி​யர்​கள் அமிர்​த​ராஜ்,​தேவேந்​தி​ரன் ஆகி​யோர் கருத்​தா​ளர்​க​ளா​க​வும் இருந்து வரு​கின்​ற​னர்.​

                     இப்​ப​யிற்​சி​யா​னது உண்டு உறை​வி​டப் பயிற்​சி​யாக 18-ம் தேதி வரை ஐந்து நாள்​கள் நடை​பெ​றும் என விருத்​தா​ச​லம் கல்வி மாவட்ட திட்ட ஒருங்​கி​ணைப்​பா​ளர் இளங்​கோ​வன் தெரி​வித்​தார்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior