உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 17, 2009

அண்​ணா​மலை பல்​கலை பட்​ட​ம​ளிப்பு விழா​ 22-ம் தேதி ஆளு​நர் வருகை:​ ஏற்​பாடு குறித்து ஆட்​சி​யர் ஆய்வு

சிதம்​ப​ரம்,​ டிச.​ 16:​ 

                      சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் இம் மாதம் 22-ம் தேதி நடை​பெ​றும் 77-வது பட்​ட​ம​ளிப்பு விழா​வில் தமி​ழக ஆளு​ந​ரும்,​​ பல்​க​லைக்​க​ழக வேந்​த​ரு​மான சுர்​ஜித் சிங் பர்​னாலா பங்​கேற்று மாணவ,​​ மாண​வி​க​ளுக்கு பட்​டங்​களை வழங்​கு​கி​றார்.​ 

                      இ​தற்​காக அவர் அன்று காலை சென்​னையி​லி​ருந்து ஹெலி​காப்​டர் மூலம் சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லை​ந​கர் வரு​கி​றார்.​ இதை​யொட்டி,​​ கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் பெ.​ சீதா​ரா​மன் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக வேளாண் கல்​லூரி வளா​கத்​தில் உள்ள ஹெலி​பேடு இடத்தை புதன்​கி​ழமை நேரில் பார்​வை​யிட்டு ஆய்வு மேற்​கொண்​டார். பின்​னர்,​​ துணை​வேந்​தர் பங்​க​ளா​வில் அனைத்​துத் துறை அதி​கா​ரி​கள் கூட்​டம் ​ நடை​பெற்​றது.​ மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.​ நட​ரா​ஜன்,​​ துணை​வேந்​தர் டாக்​டர் எம்.​ ராம​நா​தன்,​​ பதி​வா​ளர் எம்.​ ரத்​தி​ன​ச​பா​பதி,​​ பல்​க​லைக்​க​ழக மக்​கள்-​ தொடர்பு அலு​வ​லர் எஸ்.​ செல்​வம்,​​ டி.எஸ்.பி.​ மா.​ மூவேந்​தன் பல்​வேறு துறை​க​ளைச் சேர்ந்த அதி​கா​ரி​கள் பங்​கேற்​ற​னர்.​
       
                   ஆ​ளு​நர் வரு​கை​யை​யொட்டி,​​ பாது​காப்பு குறித்​தும்,​​ ​ சாலை வசதி,​​ குடி​நீர்,​​ மின்​சார வசதி ஆகி​ய​வற்றை தயார்​நி​லை​யில் இருக்க வேண்​டும் என அதி​கா​ரி​க​ளுக்கு ஆட்​சி​யர் உத்​தி​ர​விட்​டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior