உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 17, 2009

தண்​ணீ​ரில் தத்​த​ளிக்​கும் எல்.என்.​ புரம் ஊராட்சி

பண்ருட்டி,​​ டிச.​ 16: ​ 

                 பண்​ருட்டி வட்​டம் எல்.என்.புரம் ஊராட்​சிப் பகு​தி​யில் உள்ள குடி​யி​ருப்பு பகு​தி​யில் மழை நீர் சூழ்ந்து தேங்கி நிற்​ப​தால் அப்​ப​கு​தி​யில் வசிக்​கும் பொது மக்​கள் பெரி​தும் பாதிக்​கப்​பட்​டுள்​ள​னர்.​

                     பண்​ருட்டி நக​ரின் அரு​கா​மை​யில் சென்னை சாலை​யில் எல்.என்.புரம் ஊராட்சி அமைந்​துள்​ளது.​ இதில் ஆர்.எஸ்.​ மணி நகர்,​​ தேவன் நகர்,​​ தர்​மேஸ்​வ​ரர் நகர்,​​ ​ உசேன் நகர்,​​ ஷா உசேன் தர்கா நகர்,​​ திரு​மலை நகர்,​​ சின்​னம்​மாள் நகர்,​​ ​ கண​பதி நகர்,​​ ராஜன் நகர் உள்​ளிட்ட 10-ம் மேற்​பட்ட நகர்​கள் உள்​ளன.​ பண் ​ருட்டி நக​ரின் மிக அரு​கா​மை​யில் அமைந்​துள்​ள​தால் சுமார் 1500-ம் மேற்​பட்ட குடும்​பங்​கள் மேற்​கண்ட பகு​தி​யில் வசித்து வரு​கின்​ற​னர்.​ தாழ்​வான பகுதி என்​ப​தா​லும்,​​ முறை​யான சாலை மற்​றும் கழிவு நீர் கால்​வாய் இல்​லா​த​தா​லும் மழை காலத்​தில் இப்​ப​கு​தி​க​ளில் மழை நீர் சூழ்ந்து வீட்​டிற்​குள் புகுந்து சேதத்தை ​ ஏற்​ப​டுத்​து​வது வழக்​கம்.​ 

                            மழைக் காலத்​தில் பாதிக்​கப்​ப​டும் போது ஒவ்​வொரு முறை​யும் அரசு அதி​கா​ரி​கள் பார்​வை​யி​டு​வ​து​டன் சரி.​ மழைக்​கா​லம் முடிந்து தண்​ணீர் வற்​றி​விட்​டால் பின்​னர் இதை பற்றி யாரும் கண்​டுக்​கொள்​வ​தில்லை.​ தற்​போது இடை​வி​டாது பெய்த கன மழை​யால் எல்.என்.புரம் ஊராட்​சி​யல் உள்ள மேற்​கண்ட நகர் பகு​தி​யில் உள்ள வீடு​களை மழை நீர் சூழ்ந்து வெள்​ளக்​கா​டாக காட்சி அளித்​தது.​ சுமார் 10-ம் மேற்​பட்ட வீடு​க​ளுக்​குள் தண்​ணீர் புகுந்​த​தால் அதில் வசிப்​ப​வர்​கள் பாதிப்​ப​டைந்​துள்​ள​னர்.​மழை நீரு​டன் கழிவு நீர் கலந்து தேங்​கி​யுள்​ள​தால் அப்​ப​கு​தி​யில் நோய் பர​வும் சூழல் ஏற்​பட்​டுள்​ளது.​ மேலும் பல்​வேறு பகு​தி​யில் சாலை​யின் குறுக்கே பள்​ளம் வெட்டி தண்​ணீர் வெளி​யேற்​றப்​ப​டு​கி​றது.​      

                  சாலையே தெரி​யாத அள​வில் தண்​ணீர் தேங்​கி​யுள்​ள​தா​லும்,​​ குறுக்கே பள்​ளங்​கள் வெட்​டப்​பட்​டுள்​ள​தா​லும் பொது மக்​கள் நடந்​துக் கூட செல்ல முடி​யாத நிலை வாகன போக்​கு​வ​ரத்​தும் தடை​பட்​டுள்​ளது.​ இந்​நி​லை​யில் அவ​ச​ரக் காலத்​தில் மருத்​து​வ​ம​னைக்கு கூட அப்​ப​குதி மக்​களை வெளிக் கொண்டு வர முடி​யாத நிலை​யில் ஏற்​பட்​டுள்​ளது.​    

                       இது​கு​றித்து தக​வல் அறிந்த வட்​டாட்​சி​யர் ஆர்.பாபு,​​ வட்​டார வளர்ச்சி அலு​வ​லர்​கள் எஸ்.கல்​யா​ண​சுந்​த​ரம்,​​ எல்.​ ரீட்டா,​​ உத​விப் பொறி​யா​ளர் பி.ஆனந்தி ஆகி​யோர் மழை நீரால் சூழப்​பட்ட பகு​தி​களை பார்​வை​யிட்​ட​னர்.​ ​ தேங்​கிய மழை நீரை வெளி​யேற்ற சில இடத்​தில் சாலை​க​ளின் குறுக்கே வாய்க்​கால் வெட்​டப்​பட்​டது.​ 

                 பின் ​னர்,​​ இது​கு​றித்து ஊராட்சி மன்​றத் தலை​வர் சேகர் கூறு​கை​யில்,​​ இங்​குள்ள மக்​களை வெள்ள பாதிப்​பில் இருந்து பாது​காக்க உரிய நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்.​ மேலும் இப்​ப​கு​தி​யில் நோய் பர​வா​மல் இருக்க தேவை​யான நட​வ​டிக்​கையை சுகா​தா​ரத் துறை எடுக்க வேண்​டும் என்​றார்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior