உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 17, 2009

காலவரம்பற்ற உண்ணாவிரதம்​ ஆட்​சி​ய​ரின் முயற்​சி​யால் வாபஸ்

கட​லூர்,​​ டிச.​ 16: ​ 

                   கட​லூர் லாரன்ஸ் சாலை​யில் ரயில்வே சுரங்​கப் பாதை அமைக்​கக் கோரி புதன்​கி​ழமை தொடங்​க​வி​ருந்த கால​வ​ரம்​பற்ற உண்​ணா​வி​ர​தப் போராட்​டம் மாவட்ட ஆட்​சி​யர் பெ.​ சீதா​ரா​மன் மேற்​கொண்ட முயற்​சி​யால் கைவி​டப்​பட்​டது.​

                      க​ட​லூர் லாரன்ஸ் சாலை​யில் உள்ள ரயில்வே கேட்​டால்,​​ போக்​கு​வ​ரத்து நெரி​சல் ஏற்​ப​டு​வ​தைத் தவிர்க்க சுரங்​கப்​பாதை அமைக்க வேண​டும் என்​பது கட​லூர் மக்​க​ளின் நீண்​ட​கால கோரிக்கை.​ இதில் வணி​கர்​கள் ஒரு கருத்​தை​யும் வேறு சிலர் மாற்​றுக் கருத்​து​க​ளை​யும் தெரி​வித்து வரு​வ​தால் இத் திட்​டம் கிணற்​றில் போடப்​பட்ட கல்​லாக மாறி​யது.​ ​ இது​கு​றித்து பல்​வேறு துறை அதி​கா​ரி​க​ளும் மாறு​பட்ட கருத்​துக்​களை தெரி​வித்து வந்​த​னர்.​ ​ ​​ ​ 

                        சுரங்​கப் பாதைக்​காக கட​லூர் பொது​நல அமைப்​பு​க​ளின் கூட்​ட​மைப்பு பல்​வேறு போராட்​டங்​களை நடத்​தி​யுள்​ளது.​ இறு​தி​யாக பொது​நல அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​கள் புதன்​கி​ழமை கால​வ​ரம்​பற்ற உண்​ணா​வி​ர​தம் தொடங்​கு​வ​தாக அறி​வித்​த​னர்.​ ஆனால்,​​ இதற்கு காவல் துறை அனு​மதி அளிக்​க​வில்லை.​
  
                       இந்​நி​லை​யில்,​​ புதன்​கி​ழமை காலை கொட்​டும் மழை​யை​யும் பொருள்​ப​டுத்​தா​மல்,​​ உண்​ணா​வி​ர​தத்​தைத் தொடங்​கு​வ​தற்​காக மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​கம் முன் திரண்டு வந்​த​னர்.​ பந்​த​லும் போடப்​பட்​டிந்​தது.​

                     மா​வட்ட நுகர்​வோர் பாது​காப்​புப் பேரவை பொதுச் செய​லர் நிஜா​மு​தீன்,​​ வெண்​புறா பேர​வைத் தலை​வர் குமார்,​​ நக​ரக் குடி​யி​ருப்​போர் நலச் சங்​கக் கூட்​ட​மைப்​பின் பொதுச் செய​லர் மரு​த​வா​ணன் மற்​றும் பல்​வேறு அமைப்​பு​க​ளச் சேர்ந்த வழக்​க​றி​ஞர்​கள் திரு​மார்​பன்,​​ மன்​ற​வா​ணன் உள்​ளிட்ட பல​ரும் ஆட்​சி​யர் அலு​வ​ல​கம் முன் உண்​ணா​வி​ர​தம் தொடங்க இருந்​த​னர்.​ ​​ இந்​நி​லை​யில்,​​ கட​லூர் எம்.எல்.ஏ.​ அய்​யப்​பன்,​​ மாவட்ட ஆட்​சி​யர் பெ.​ சீதா​ரா​மன் ஆகி​யோர் போராட்ட ஒருங்​கி​ணைப்​பா​ளர் நிஜா​மு​தீ​னைத் தொடர்பு கொண்டு,​​ சுரங்​கப் பாதைத் திட்​டம் நிறை​வேற நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என்​ற​னர்.​ எனவே,​​ உண்​ணா​வி​ர​தம் இருக்க வேண்​டாம் என்று கேட்​டுக் கொண்​ட​னர்.​ மேலும்,​​ இப்​பி​ரச்னை தொடர்​பாக பிற்​ப​கல் 3 மணிக்​குப் பேச​லாம் என்று மாவட்ட ஆட்​சி​யர் தெரி​வித்​தார்.​ இதன்​படி மாலை மாவட்ட ஆட்​சி​யர் தலை​மை​யில் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது.​ இதில் பொது​நல அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​கள்,​​ நெடுஞ்​சா​லைத் துறை அதி​கா​ரி​கள் வரு​வாய்த் துறை அதி​கா​ரி​கள் கலந்​து​கொண்​ட​னர்.​

                      மா​வட்ட ஆட்​சி​யர் ரயில்வ உயர் அதி​கா​ரி​கள் நெடுஞ்​சா​லைத்​துறை அதி​கா​ரி​க​ளு​டன் பேசி சுரங்​கப்​பா​தைத் திட்​டத்​தின் தற்​போ​தைய நிலை குறித்து விளக்​கி​னார்.​ சுரங்​கப்​பாதை அமைக்க ஆயத்​தப் பணி​கள் முடிந்​து​விட்​டன.​ கட்​டு​மா​னப் பணி விரை​வில் தொடங்​கும்.​ இப்​ப​ணி​யைக் கண்​கா​ணிக்க நெடுஞ்​சா​லைத்​துறை,​​ வரு​வாய்த்​துறை ரயில்வே துறை அலு​வ​லர்​கள் கொண்ட கண்​கா​ணிப்​புக் குழு அமைக்​கப்​ப​டும் என்​றும் மாவட்ட ஆட்​சி​யர் உறு​தி​யத்​த​தைத் தொடர்ந்து உண​ணா​வி​ர​தப் போராட்​டம் கைவி​டப்​பட்​ட​தாக அறி​விக்​கப்​பட்​டது.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior