உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 17, 2009

நெய்​வே​லி​யில் சுரங்​கப் பணி பாதிப்பு

நெய்வேலி,​​ டிச.​ 16: ​ 

                  கடந்த 3 தினங்​க​ளாக தொடர்ந்து பெய்​து​வ​ரும் கன மழை​யால் நெய்​வே​லி​யில் சுரங்​கப் பணி​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளன.​​ நெய்​வே​லி​யில் என்.எல்.சி.​ நிறு​வ​னத்​தின் சார்​பில் 3 திறந்​த​வெளி பழுப்பு நிலக்​கரி சுரங்​கங்​க​ளும்,​​ 3 அனல்​மின் நிலை​யங்​க​ளும் இயங்​கி​வ​ரு​கின்​றன.​ 

                  இந்த அனல்​மின் நிலை​யங்​கள் மூலம் 2 ஆயி​ரத்து 490 மெகா​வாட் மின்​சா​ரம் உற்​பத்தி செய்​யப்​பட்டு,​​ தமி​ழ​கம் உள்​ளிட்ட தென்​மா​நி​லங்​க​ளுக்கு விநி​யோ​கிக்​கப்​ப​டு​கி​றது.​​ ​ இந்​நி​லை​யில்,​​ கட​லூர் மாவட்​டத்​தில் தொடர்ந்து பெய்​து​வ​ரும் கன மழை​யால் திறந்​த​வெளி சுரங்​கங்​க​ளில் பழுப்பு நிலக்​கரி வெட்​ட​மு​டி​யாத சூழல் உரு​வா​கி​யுள்​ளது.​

                    சுரங்க இயந்​தி​ரங்​கள் ஒரு இடத்தை வேறு இடத்​திற்கு நகர முடி​யாத அள​வுக்கு சுரங்​கத்​தி​னுள் சேறும்,​​ சக​தி​யு​மா​கக் காணப்​ப​டு​வ​தால்,​​ சிறப்பு சுரங்க இயந்​தி​ரங்​க​ளின் இயக்​கம் முற்​றி​லு​மாக நிறுத்​தப்​பட்​டுள்​ளது.​​ மாறாக,​​ சுரங்​கத்​தி​னுள் மழை​நீரை சேமிக்க பயன்​ப​டுத்​தப்​ப​டும் சிறு குட்​டை​க​ளில்,​​ தேங்​கி​யுள்ள நீரை ராட்​சத பம்​பு​க​ளைக் கொண்டு வெளி​யேற்​றும் பணி தீவி​ர​மாக நடை​பெற்​று​வ​ரு​கி​றது.​ இத​னால்,​​ பழுப்பு நிலக்​கரி வெட்​டி​யெ​டுக்​கும் பணி​யும் தடை​பட்​டுள்​ளது.​​ இருப்​பி​னும்,​​ பழுப்பு நிலக்​கரி சேமிப்​புக் கிடங்​கு​க​ளில் உள்ள பழுப்பு நிலக்​க​ரியை பயன்​ப​டுத்தி அந்​தந்த அனல்​மின் நிலை​யங்​க​ளில் மின்​னுற்​பத்தி தொடர்ந்து நடை​பெற்​று​வ​ரு​வ​தாக அன்ல்​மின் நிலைய அதி​கா​ரி​கள் தெரி​வித்​த​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior