உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 10, 2009

அமைப்பு சாராத் தொழி​லா​ளர் நாளை சிறப்பு உறுப்​பி​னர் ​சேர்க்கை முகாம்

கட​லூர்,​​ டிச.​ 9: 

                அமைப்பு சாராத் தொழி​லா​ளர் நல​வா​ரி​யத்​தில் உறுப்​பி​னர்​க​ளைச் சேர்க்க சிறப்பு முகாம் வெள்​ளிக்​கி​ழமை ​ காட்​டு​மன்​னார்​கோ​யில் ரம்​ஜான் தைக்​கால் ஏ.ஆர்.எஸ்.​ திரு​மண மண்​ட​பத்​தில் நடை​பெ​றும் என்று மாவட்ட தொழி​லா​ளர் அலு​வ​லர் புனி​த​வதி அறி​வித்​துள்​ளார்.​

 அ​வர் புதன்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​

                உ ​டல்​உ​ழைப்பு கட்​டு​மா​னம்,​​ ஆட்டோ,​​ தையல்,​​ சலவை,​​ ​ பனை​ம​ரம்,​​ கைவினை,​​ கைத்​தறி,​​ காலணி,​​ ஓவி​யர்,​​ மண்​பாண்​டத் தொழில் பொற்​கொல்​லர்,​​ வீட்​டுப் பணி​யா​ளர்,​​ விசைத்​தறி உள்​ளிட்ட தொழில்​க​ளில் ஈடு​ப​டும் அமைப்பு சாராத் தொழி​லா​ளர்​கள் இந்த சிறப்பு முகா​மில் நவா​ரிய ​ உறுப்​பி​னர்​க​ளா​கச் சேர்த்​துக் கொள்​ளப்​ப​டு​வார்​கள்.​

                  காட்​டு​மன்​னார்​கோ​யில் தாலு​கா​வைச் சேர்ந்த மேற்​கண்ட தொழி​லா​ளர்​கள் பாஸ்​போர்ட் அளவு புகைப்​ப​டம் 3,​ குடும் அட்டை நகல்,​​ வாக்​கா​ளர் அடை​யாள அட்டை நகல் ​ மற்​றும் அச​லு​டன் வந்து உறுப்​பி​னர்​க​ளா​கச் சேர்ந்து பயன் அடை​ய​லாம்.​

             15 அமைப்பு சாராத் தொழி​லா​ளர் நல வாரி​யங்​க​ளுக்​கும் உறுப்​பி​னர் சேர்க்கை முகாம்​கள் ஒவ்​வொரு தாலுகா தலைமை இடத்​தி​லும்,​​ பிர​தி​மா​தம் 2-வது வெள்​ளிக் கிழ​மை​க​ளில் நடை​பெற உள்​ளது.​ ஆங்​காங்கே வசிக்​கும் தொழி​லா​ளர்​கள்,​​ இந்த முகாம்​க​ளில் கலந்​து​கொண்டு நல​வா​ரி​யங்​க​ளில் உறுப்​பி​னர்​க​ளாக ஆகு​மாறு கேட்​டுக் கொள்​ளப் படு​கி​றார்​கள் என்​றும் செய்​திக் குறிப்பு தெரி​விக்​கி​றது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior