உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 10, 2009

என்​எல்​சிக்கு உள​வி​யல் நிபு​ணர் பாராட்டு

​நெய்வேலி,​​  டிச.​ :​9 ​ 
 
                  சமூக பொறுப்​பு​ணர்​வோடு தொண்​டாற்​றி​வ​ரும் என்.எல்.சி.​ நிறு​வ​னத்​தின் பணி​களை திருச்​சி​யைச் சேர்ந்த உள​வி​யல் நிப​ண​ரான டாக்​டர் கோபா​ல​கி​ருஷ்​ணன் பாராட்டு தெரி​வித்​துள்​ளார்.​
 
                    இங் ​குள்ள என்.எல்.சி.​ பயிற்சி வளா​கத்​தில் செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்ற மன​வ​ளம் குன்​றி​யோ​ருக்​கான தேசிய நாள் விழா​வில் கெüரவ விருந்​தி​ன​ரா​கக் கலந்​து​கொண்ட திருச்சி சொள​மான்​யஸ் மன​நல மருத்​து​வ​மனை இயக்​கு​நர் டாக்​டர் கோபா​ல​கி​ருஷ்​ணன் மேலும் பேசி​யது:​÷தா ​யின் வயிற்​றில் குழந்​தை​கள் வள​ரும் போது தாய்க்​குத் தேவை​யான உணவு ஊட்​டச்​சத்து,​​ உடல்​நோய்​கள் போன்ற கார​ணங்​க​ளி​னால் தான் மன​ந​லம் குன்​றிய குழந்​தை​கள் பிறக்​கின்​றன.​ போபால் விஷ​வாயு தாக்​கிய சம​யத்​தில்,​​ அப்​ப​கு​தி​யில் போதிய மன​நல மருத்​து​வர்​கள் இல்​லா​த​தால் பல்​வேறு தரப்​பி​னர் மன​ந​லம் பாதிக்​கப்​பட்​ட​னர்.​ மன​ந​லம் குன்​றி​யோ​ருக்​கான நலன்​காக்​கும் விதி​மு​றை​கள் 1995-ம் ஆண்டு முதல் அமல்​ப​டுத்​தப்​பட்ட பிறகு அவர்​க​ளுக்​கான உரிமை பற்​றிய விழிப்​பு​ணர்வு ஏற்​பட்​டுள்​ளது.​ இக்​கு​ழந்​தை​க​ளுக்கு நமது பரி​தா​பத்​தைக் காட்​டு​வ​தைக் காட்​டி​லும்,​​ அவர்​க​ளுக்கு பொறு​மை​யு​ட​னும்,​​ இரக்​கக் குணத்​து​ட​னும்,​​ விடா​மு​யற்​சி​யு​ட​னும் உத​வ​வேண்​டும் என்​றார் கோபா​ல​கி​ருஷ்​ணன்.​
 
                       முன் ​ன​தாக,​​ விழா​வில் பங்​கேற்ற என்.எல்.சி.​ நிறு​வன தலை​வர் ஏ.ஆர்.​ அன்​சாரி பேசும்​போது,​​ மன​ந​லம் குன்​றி​யோ​ருக்​கான சினேகா வாய்ப்​புச் சேவை​கள் பள்​ளிக்கு என்.எல்.சி.​ நிறு​வ​னத்​தின் சார்​பில் ரூ.10 லட்​சம் வழங்​கப்​ப​டும் என்​றார்.​ மன​ந​லம் குன்​றி​ய​வர்​கள் நிறு​வ​னத்​தின் தொழில் பிரி​வு​க​ளில் பணி​ய​மர்த்​தப்​படா விட்​டா​லும்,​​ அவர்​கள் நிர்​வா​கப் பிரி​வில் பணி​ய​மர்த்​தப்​பட்​டுள்​ள​னர் என்​றார்.​ நிறு​வன இயக்​கு​நர்​கள் வி.சேது​ரா​மன் மற்​றும் சுரேந்​தி​ர​மோ​கன் ஆகி​யோர் வாழ்த்​திப் பேசி​னர்.​​ முன்​ன​தாக,​​ ஸ்நேகா வாய்ப்​புச் சேவை​கள் அமைப்​பின் தலை​வர் கிஷ்​வர் சுல்​தான வர​வேற்​றார்.அமைப்​பின் உறுப்​பி​னர்​கள் டாக்​டர் உஷா மற்​றும் ஜனார்த்​த​னன் மன​ந​லம் குன்​றி​யோ​ருக்​கான உரி​மை​கள் குறித்த உறு​தி​மொ​ழி​யைக் கூற அனை​வ​ரும் எடுத்​துக்​கொண்​ட​னர்.​
 
                 அ​மைப்​பின் செய​லர் சண்​மு​க​சுந்​த​ரம் அமைப்​பின் செயல்​பா​டு​கள் குறித்த ஆண்​ட​றிக்​கையை வாசித்​தார்.​ இதைத் தொடர்ந்து மாணவ,​​ மாண​வி​க​ளின் கலை நிகழ்ச்​சி​கள் நடை​பெற்​றன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior