உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 10, 2009

அடகு நகை வியா​பா​ரி​கள் கடை​ய​டைப்பு

நெய்வேலி, ​​ டிச.​ 9:​ 

                  கட​லூர் மாவட்ட டெல்டா பிரிவு போலீ​ஸôர் அடகு நகை வியா​பாரி வீட்​டில் நள்​ளி​ர​வில் அத்​து​மீறி நடந்​து​கொண்​ட​தா​கக் கூறி,​​ அதைக் கண்​டித்து அடகு நகை விய​பா​ரி​கள் புதன்​கி​ழமை கடை​ய​டைப்பு போராட்​டம்  (படம்) நடத்​தி​னர்.​

              வி​ருத்​தா​ச​லத்​தில் அடகு நகை வியா​பா​ரம் செய்து வரு​ப​வர் சாம்​பாஜி.​ இவர் திருட்டு நகை ஈட்​டின் பேரில் பணம் வழங்​கு​வ​தாக ஒரு குற்​ற​வாளி அளித்​தத் தகவ​லின் பேரில்,​​ அவ​ரது வீட்​டுக்கு செவ்​வாய்க்​கி​ழமை நள்​ளி​ரவு டெல்டா பிரிவு இன்ஸ்​பெக்​டர் அம்​பேத்​கர் தலை​மை​யில் 7 போலீ​ஸôர் சென்​ற​ன​ராம்.​ வீட்​டின் மாடி​யில் ஏறிக் குதித்து கதவை உடைக்க முயற்சி செய்​த​தா​க​வும் கூறப்​ப​டு​கி​றது.​ பின்​னர்,​​ சாம்​பா​ஜி​யும்,​​ அவ​ரது மனைவி மீனா​வும் வெளியே வந்​த​போது,​​ எவ்​வித கார​ண​மும் கூறா​மல் சாம்​பா​ஜியை போலீ​ஸôர் இழுத்​துச் சென்​ற​தா​க​வும் கூறப்​ப​டு​கி​றது.​

              இச் சம்​ப​வத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து கடை அடைப்பு போராட்​டம் நடத்​திய அடகு நகை வியா​பா​ரி​கள் நகை அடகு வணி​கர்​கள் சங்​கத் தலை​வர் சோகன்​லால் தலை​மை​யில் அணி திரண்​ட​னர்.​ போ​லீ​ஸô​ரால் கைது செய்​யப்​பட்ட சாம்​பாஜி எங்கு,​​ எதற்​காக அழைத்​துச் செல்​லப்​பட்​டார் என்​பதை எழுத்​து​மூ​ல​மாக தெரி​விக்​கக் கோரி மாவட்ட ஆட்​சி​யர்,​​ மாவட்ட தலைமை நீதி​பதி,​​ விழு​புப்​பு​ரம் சரக டிஐஜி உள்​ளிட்​டோ​ருக்கு மனு அளித்​த​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior