உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 10, 2009

கட​லூர் அரசு அலு​வ​ல​கத்​தில்​ ஆத​ர​வற்​றுக் கிடந்த குழந்தை

கடலூர்,​​ டிச.​ 9: ​ 
 
            கட​லூர் பொதுப் பணித்​துறை அலு​வ​ல​கத்​தில் ஆத​ர​வற்​றுக் கிடந்த பெண் குழந்​தையை மக​ளிர் காவல் நிலை​யப் போலீ​ஸôர் மீட்டு அரசு மருத்​து​வ​ம​னை​யில் ​ ஒப்​ப​டைத்​த​னர்.​ ​
          
                க​ட​லூர் நெல்​லிக்​குப்​பம் சாலை​யில் உள்ள பொதுப்​ப​ணித்​துறை அலு​வ​லக வளா​கத்​தில் உள்ள வர​சித்தி விநா​ய​கர் ஆல​யத்​தில்,​​ திங்​கள்​கி​ழமை இரவு குழந்தை அழும் சப்​தம் கேட்​டது.​
 
                அ​லு​வ​லக ஊழி​யர் வந்து பார்த்​த​போது,​​ பிறந்து 3 நாள்​களே ஆன பெண் குழந்தை குளி​ரில் நடுங்​கி​ய​ப​டிக் கிடந்​தது கண்​டு​பி​டிக்​கப்​பட்​டது.​ இது​கு​றித்து தகவல் அறிந்த போ​லீஸ் சப்-​இன்ஸ்​பெக்​டர் சித்ரா விரைந்து சென்று,​​ அந்​தக் குழந்​தை​யைக் கைப்​பற்​றி​னார்.​ சைல்டு லைன் அமைப்​பின் மூல​மாக குழந்தை கட​லூர் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டது.​ மா​ வட்ட சமூக நலத்​துறை மூலம் இக் குழந்தை அங்​கீ​கா​ரம் பெற்ற குழந்​தை​கள் பரா​ம​ரிப்பு மற்​றும் தத்து கொடுக்​கும் நிறு​வ​னத்​தி​டம் ஒப்​ப​டைக்​கப்​ப​டும் என்று சைல்டு லைன் அமைப்​பைச் சேர்ந்​த​வர்​கள் தெரி​வித்​த​னர்.​ ​
 
               பி​றந்து 3 நாள்​களே ஆன இக் குழந்​தை​யைப் பொதுப் பணித்​துறை அலு​வ​லக வளா​கத்​தில் போட்​டுச் சென்​றது யார் என்று கட​லூர் புது​ந​கர் போலீ​ஸôர் விசா​ரணை மேற்​கொண்டு உள்​ள​னர்.​
 
           இச் சம்​ப​வத்​தைத் தொடர்ந்து கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னை​யில் பிறந்த குழந்​தை​கள் சரி​பார்க்​கப்​பட்​டன.​ அனைத்து குழந்​தை​க​ளும் சரி​யாக இருப்​ப​தாக தெரி​விக்​க​கப்​பட்​டது.​ ​
 
          அண்​மைக் கால​மாக கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னை​யில் பிறக்​கும் குழந்​தை​களை முள்​பு​த​ரி​லும்,​​ பொது இடங்​க​ளி​லும் அநா​தை​யாக விட்​டுச் செல்​லும் சம்​ப​வம் அதி​க​ரித்து வரு​கி​றது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior