உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 10, 2009

மத்​திய சிறை ​துப்​பு​ரவு தொழி​லாளி சஸ்​பெண்ட்

கடலூர்,​​ டிச.​ 9: 
 
                  கட​லூர் மத்​திய சிறைக் கைதி தற்​கொலை செய்து கொண்​டது தொடர்​பாக சிறைச்​சாலை துப்​பு​ர​வுத் தொழி​லாளி செவ்​வாய்க்​கி​ழமை இடை​நீக்​கம் செய்யப்​பட்​டார்.​
 
                 வி​ழுப்​பு​ரம் மாவட்​டம் கிளி​ய​னூரை அடுத்த நெற்​கு​ணம் கிரா​மத்​தைச் சேர்ந்​த​வர் பாலு ​(23).​ கொலை வழக்​கில் அவர் ஆயுள் சிறைத் தண்​டனை பெற்று கட​லூர் மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்டு இருந்​தார்.​ அவரை உற​வி​னர்​கள் யாரும் வந்து பார்க்​கா​த​தால் மனம் உடைந்து காணப்​பட்​டார்.​
 
                 திங்​கள்​கி​ழமை காலை​யில்,​​ அவர் தற்​கொலை செய்​து​கொள்​ளும் நோக்​கில் சிறை கழி​வ​றை​களை சுத்​தம் செய்ய வைத்​தி​ருந்த பினா​யிலை குடித்து விட்​டார் கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்டு பாலு இறந்​தார்.​
 
         இ ​து​தொ​டர்​பாக சிறைச்​சாலை துப்​பு​ர​வுத் தொழி​லாளி மனோ​க​ரனை ​(35) பணி இடை​நீக்​கம் செய்து சிறைத்​துறை இயக்​கு​நர் ஷியாம் சுந்​தர் உத்​த​ர​விட்​டார்.​
 
இரு போலீ​ஸôர் இடை​நீக்​கம் ​
 
           பெண் கைதி லட்​சுமி ​(33) தப்பி ஓடி​யது தொடர்​பாக,​​ போலீஸ் காவ​லர்​கள் இந்​திரா,​​ விநோத்​கு​மார்  செவ்​வாய்க்​கி​ழமை இடை​நீக்​கம் செய்​யப்​பட்டு உள்​ள​னர்.​
 
              வே​லூர் மாவட்​டம் ஆம்​பூ​ரைச் சேர்ந்த ராஜாவின் மனைவி லட்​சுமி,​​ திருட்டு வழக்​கில் கைது செய்யப்​பட்டு கட​லூர் மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்டு இருந்​தார்.​ இந்​நி​லை​யில நெஞ்​சுவலி கார​ண​மாக சிகிச்​சைக்​காக கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்டு இருந்த லட்​சுமி,​​ கடந்த 7-ம் தேதி தப்பி ஓடி​விட்​டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior