உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 16, 2010

தலித் இன துணைத் திட்டத்தை முறையாக நடைமுறை படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

                     தலித் இன துணைத் திட்டத்தை முறையாக நடைமுறை படுத்தக்கோரி தமிழ்நாடு தலித் இன துணை திட்ட போராட்டகுழு சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வரும் பட்ஜெட்டில் தலித் இனத்தவருக்கு துணைத் திட்ட நிதியாக 20 சதவீதம் தொகையை முழுமையாக ஒதுக்கி இதனை பொது திட்டத்திற்கு மாற் றாமல் தலித் மக்களின் மேம்பாட்டிற்காக மட் டுமே பயன்படுத்த வேண் டும். நிதியை ஆதிதிராவிடர் நலத்துறையிடம் ஒப்படைத்திட வேண்டும். தலித் இன துணைத் திட் டத்தை முறையாக நடைமுறை படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட தலித் இன துணைத் திட்ட போராட் டக்குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய குடியரசுக் கட்சி மாநிலத் தலைவர் ஜெயசீலன், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் சாமித் துரை முன்னிலை வகித்தார். அம்பேத்கர் பேரவை மாவட்டத் தலைவர் கமராஜ் வரவேற்றார். தலித் மண்ணுரிமை கூட்டமைப்பு தலைவர் நிக்கோலஸ், பீம்சேனா, இந்திய குடியரசு கட்சி ஆனந்தவேல், செயலாளர் காமராஜ்,  ஜான்பிரிட்டோ, கணேசன்  பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior