உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 16, 2010

கராத்தே போட்டி மாணவர்கள் சாதனை

கடலூர் : 

              அரியலூர் மாவட்டத் தில் நடந்த கராத்தே போட்டியில் கடலூர் லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.தென்னிந்திய ஓபன் கராத்தே சாம்பியன் ஷிப் போட்டி அரியலூர் மாவட்டம் செந்துறையில் நடந்தது. 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் கட்டா பிரிவில் சிவரஞ்சித், சதீஷ்குமார், அருண்குமார், முரளிதரன், யாசர் அராபத், மணிகண்டன், அசோக்குமார் ஆகியோர் முதலிடம் பெற்றனர். ராகுல், விஜயவல்லபன், பாலச்சந்தர், அரவிந்த்குமார், கணேஷ்குமார் ஆகியோர் 2ம் இடத்தை வென்றனர்.மேலும் குமுத்தே பிரிவில் விஜய வல்லபன், சரவணகுமார், பிரவின்குமார், பாக்கியராஜ் முதலிடத்தையும், அடைக்கலராஜ், மணிகண்டன் 2ம் இடத்தையும் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களை லட்சமி சோரடியா பள்ளி தாளாளர் மாவீர்மல் சோர்டியா, சுன்கான் இஷின்ரியு கராத்தே தலைவர் சென் சாய் கிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior