உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 16, 2010

காட்டுதேனீக்கள் கூடு கட்டினால் தகவல் தெரிவியுங்கள் : தீயணைப்பு நிலைய அலுவலர் வேண்டுகோள்

சிறுபாக்கம் : 

                  வேப்பூர் பகுதிகளில் காட்டு தேனீக்கள் கூடு கட்டும்போதே தகவல் தெரிவிக்குமாறு தீயணைப்பு அலுவலர் வேண் டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:

              வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் அண்மை காலமாக காட்டுதேனீக் கள் மற்றும் விஷ வண்டுகள் தாக்கி ஆவட்டி, புல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டனர். காட்டு பகுதிகளில் உள்ள மரங்களில் சிறு கூடாக காட்டு தேனீக்கள் கூடு கட்டும்போதே, சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர் மூலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.காட்டு தேனீக்கள் கூடு கட்டியிருக்கும் இடத்தில் புகை மூட்டமோ அல்லது செடிகளை கொளுத்தும் போது, வெளியேறும் புகையால் ஆவேசமடையும் விஷ வண்டுகள் வழியல் செல்வோரை தாக்க வாய்ப்புள்ளது. மாலை 6 மணிக்கு பிறகே தீயணைப்பு நிலைய வீரர்கள் மருந்து, நீட்டிப்பு ஏணி மூலம் காட்டு தேனீக்களை அழிக்க முடியும். எனவே சிறு கூடாக உள்ளபோதே தகவல் தெரிவிக்க வேண்டும் என  செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior