உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மே 16, 2010

பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்காக கூடுதல் வேலைவாய்ப்புப் பதிவு மையங்கள்

            பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் எளிதாக பதிவு செய்யும் வகையில், கூடுதல் வேலைவாய்ப்புப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
இதுகுறித்து தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் ஆ.சு. ஜீவரத்தினம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பது:"

                          பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எளிதாக பதிவு செய்யும் வகையில், கூடுதல் வேலைவாய்ப்புப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.சென்னை மண்டலத்தில் 12 இடங்களிலும், மதுரை மண்டலத்தில் 20 இடங்களிலும், திருச்சி மண்டலத்தில் 26 இடங்களிலும், கோவை மண்டலத்தில் 21 இடங்களிலும் புதிய வேலைவாய்ப்புப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதுதவிர அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவுப் பணிகள் நடைபெறும்.கூடுதல் வேலைவாய்ப்பு பதிவு மையங்கள் குறித்த விவரங்கள் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் விரைவில் வெளியிடப்படும். எனவே, பிளஸ்-2 தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகள் வீட்டுக்கு அருகில் உள்ள வேலைவாய்ப்புப் பதிவு மையத்திலேயே பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகுதியையும் அங்கேயே பதிவு செய்யலாம்.இந்த வேலைவாய்ப்பு மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். பதிவுக்குச் செல்லும் மாணவர்கள் மதிப்பெண் பட்டியல், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றுடன் குடும்ப அட்டை அசல் மற்றும் நகல் ஒன்றையும் எடுத்துச் செல்லவேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior