உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மே 16, 2010

ஆசிரியர்களின் ஊதியத்தை அரசு வழங்குமா? மெட்ரிக் பள்ளி கட்டணம் குறித்து கருத்து

சிதம்பரம் : 

                     தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை அரசே ஏற்றால் அரசின் கட்டண குறைப்பால் எந்த பாதிப்பும் ஏற்படாது என முன்னாள் எம்.எல்.சி., மற்றும் சிதம்பரம் காமராஜ் கல்வி நிறுவனங்களின் தாளா ளர் லட்சுமிகாந்தன் கூறினார்.

முன்னாள் எம்.எல்.சி., மற்றும் சிதம்பரம் காமராஜ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமிகாந்தன் கூறியதாவது: 

                    கல்வி என்பது தேசிய முதலீடு. இதில் செலவிடப்படும் தொகை நாட்டின் அறிவு வளத்தை பெருக்கி சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது. தேவைக்கேற்ப கல்வி நிலையங்களை துவங்க அரசிடம் போதுமான நிதி வசதி இல்லாததால் தான் சுயநிதி கல்வி நிறுவனங்கள் துவக்க அரசு அனுமதி தருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் 10 ஆயிரம் மெட்ரிக் மற்றும் நர்சரி பள் ளிகள் இயங்கி வருகிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் இங்கு தரமான கல்வி பெறுகின்றனர். கல்வியுடன் ஒழுக்கம், கட் டுப்பாடு போதிப் பதால் நாளுக்கு நாள் த்தகைய பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதுதவிர ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத அலுவலர்களுக்கு நேரடி வேலை, கட்டுமான பணி உள்ளிட்டவைகள் மூலம் பலருக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அரசு விதிமுறைகளுக்குட்பட்டு அனைத்து வசதிகளுடன் பள்ளி துவங்க தோராய மதிப்பின்படி இடம், கட்டடம், இதர வசதிகளுக் காக பள்ளிக்கு ( சிறிய பள்ளிகள் தவிர்த்து) ஒன்னரை கோடி வரை செலவாகிறது. அத்துடன் ஆண்டுக் காண்டு மாணவர்களின் எண் ணிக்கை அடிப்படையில் பராமரிப்பு, உபகரணங்கள், லேப், கம்ப் யூட்டர், கட்டட வசதி பெருக்குவது, கட்டட பராமரிப்பு, சீரமைப்பு, மேசை, நாற்காலி என செலவிடப்படுகிறது. அரசின் ஆறாவது ஊதியக்குழுவின் படி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கினால் ஆண்டு செலவுத்தொகை மேலும் கூடுதலாகும். அங்கீகாரம் மற்றும் அதிகார கெடுபிடியைத் தவிர வேறு எதுவும் இப்பள்ளிகளுக்கு செய்யாத அரசு, இப்பொழுது கட்டண நிர்ணயம் செய்து தேவையற்ற குழப்பங்களை உண்டாக்கி பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பிரச்னைகளை தந்திருக்கிறது.

பள்ளி நிர்வாகத்தை முடக்கவும், மெட்ரிக் பள்ளிகளின் வளர்ச்சியை தடுக்கவும் பெற்றோர், மாணவர்களுக்கிடையே குழப்பத்தை உருவாக் கவும், ஆசிரியர்களின் தற்போதை ஊதியம் குறையவுமே இக்குழு வழி செய்துள்ளது. பெற்றோர்களுக்கு உதவி செய்ய அரசு நினைத்தால் அவர்களின் கட்டண சுமையை குறைக்க, முதலில் பள்ளிகளின் சுமையை குறைக்க முன்வரவேண்டும்.

                      மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு உதவிபெறும் தனியார் பள்ளியை போல அரசே ஊதியம் வழங்க வேண்டும். நிர்வாகம், பராமரிப்பு மற்றும் வளர்ச்சி பணிகளின் மதிப் பீட்டின் அடிப்படையில் பள்ளிக் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். பள்ளி துவங்கவும், வளர்ச்சி பணிகளுக்கும் நிர்வாகத்தால் வாங்கப் பட்ட கடனை திருப்பி செலுத்த தேவையான அடிப்படையில் சிறப்பு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். இத்திட்டங்களை அமல்படுத்தினால் ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு நன்மை கிடைக்கும். தற்போது கோவிந்தராஜன் குழு நிர்ணயித்துள்ள கட்டணத் தொகையும் குறைந்து பெற்றோர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளின் நிதிச்சுமையும் வெகுவாக குறையும். காரணம் ஊதியம் வழங்கவே அதிக பணம் தேவைப்படுகிறது. இவ்வாறு லட்சுமிகாந்தன் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior