உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மே 16, 2010

மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை


கடலூர் : 

                            பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார். பண்ருட்டி அடுத்த எஸ்.கே.பாளையத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் விஜயா (17). இவர் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றார். இதனால் மனமுடைந்த விஜயா பூச்சி மருந்தை குடித்தார். உடன் அவரை உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.

                                 இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.இதே போன்று கடலூர் கூத்தப்பாக்கம் கிருஷ்ணசாமி நகரைச் சேர்ந்தவர் ரகுபதி மகள் பிரியா (18). இவர் பிளஸ் 2 தேர்வில் 950 மதிப்பெண் பெற்றுள்ளார். மதிப்பெண் குறைவாக பெற்றதாக கருதிய பிரியா மனமுடைந்து வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார். உடன் அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior