உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மே 16, 2010

இறந்தவர் உடலை புதைப்பதில் போட்டா போட்டி இரு மீனவ கிராமங்களில் பதட்டம்: போலீஸ் குவிப்பு

கடலூர் : 

                 இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட பிரச்னையால் இரு மீனவ கிராமங்களில் பதட்டம் நிலவியது.

                       கடலூர் அடுத்த சித்திரைப்பேட்டையைச் சேர்ந்தவர் மணி(50). இவர் கடந்த 25 ஆண்டாக தனது குடும்பத்துடன் சிங்காரத்தோப்பில் வசித்து வந்தார். கடந்த 10 நாளாக சித்திரைப் பேட்டையில் உள்ள தனது பெற்றோருடன் தங்கியிருந்த மணி நேற்று திடீரென இறந்தார். மணியின் உடலை சிங்காரத் தோப்பில் அடக்கம் செய்ய அவரது தம்பி ராமலிங்கம் ஏற்பாடு செய்தார். அதற்கு அவரது மகன்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனையறிந்த சிங்காரத்தோப்பு மீனவர்கள் 50 பேர் படகில் சித்திரைப் பேட்டைக்கு சென்றதால் இரு மீனவ கிராமங்களுக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. தகவலறிந்த டி.எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசாருடன் சென்று இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இறந்த மணியின் உடலை சித்திரைப்பேட்டையில் அடக்கம் செய்ய உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். அதனையேற்று சிங்காரத்தோப்பு மீனவர்கள் தங்கள் கிராமத்திற்கு திரும்பிச் சென்றனர். இருப்பினும் இரு கிராமத்திலும் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior