உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மே 16, 2010

மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை: கமிஷனர் எச்சரிக்கை

விருத்தாசலம் : 

               விருத்தாசலத்தில் மின் மோட்டார் இணைத்து குடிநீரை உறிஞ்சினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் தெரிவித்தார். விருத்தாசலம் நகராட்சி பகுதிகளில் வீட்டு குடிநீர் குழாய்களில் மின் மோட்டார் இணைத்து குடிநீர் உறிஞ்சுவதாக புகார் வந்தன.

             ஆய்வு செய்து, விதிமுறைகளை மீறி பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார்களை பறிமுதல் செய்ய நகராட்சி கமிஷனர் திருவண்ணாமலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி நகராட்சி துப்புரவு அலுவலர் பரமசிவம் தலைமையில், ஆய்வாளர் பாலமுருகன், எலக்ட்ரிஷியன் தண்டபாணி, ஓயர்மேன் பழனி, பிட்டர் ரங்கபாஷியம் ஆகியோர் வீரபாண்டியன் தெரு, அண்ணா தெரு, லூகாஸ் தெரு உள் ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆய்வு செய்து 30 மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து கமிஷனர் திருவண்ணாமலை கூறுகையில், 

                                       விருத்தாசலம் நகராட்சியில் காலை 2 மணி நேரம், மாலை 2 மணிநேரம் குடிநீர் வழங்கப்படுகிறது. இருந்தும் மின் மோட்டார் வைத்து குடி நீர் உறிஞ்சுவதால் அனைவருக்கும் குடிநீர் செல்வதில்லை. அனைவருக்கும் குடிநீர் செல்லும் வகையில் இந்த மின் மோட்டார் பறிமுதல் நடவடிக்கையை நகராட்சி எடுத்து வருகிறது. இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நகராட்சி விதிகளை மீறுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior