உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

கடலூரில் அன்னை தெரசா 100-வது பிறந்த நாள் விழா

கடலூர்:

            அன்னை தெரசா 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அன்னை தெரசா பொதுநலச் சேவை இயக்கம் சார்பில் வியாழக்கிழமை இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர். 

              பொதுநல சேவை இயக்க உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 25 பேர் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சிக்கு பொதுநலச் சேவை இயக்க மாவட்ட அவைத் தலைவர் அகஸ்டின் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ரத்தின சௌ ந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். மாவட்டச் செயலாளர் ஆசைத் தாமஸ் முன்னிலை வகித்தார். முகைமை முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி தொடங்கி வைத்தார்.
 
              பொதுச் சேவை இயக்கம் சார்பில் பண்ருட்டியில் நடைபாதை வியாபாரம் செய்யும் 100 பேருக்கும், கடலூர் லாரன்ஸ் சாலையில் நடைபாதை வியாபாரிகள் 100 பேருக்கும் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. மாவட்ட பொருளாளர் சண்முகம் துணைப் பொதுச் செயலாளர் கிருபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சிதம்பரத்தில்... 

               சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் அன்னை தெரசா பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.  பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவும், பள்ளிக்கு 15 பிளாஸ்டிக் நாற்காலிகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவர் பெரி.முருகப்பன் தலைமை வகித்தார். செயலாளர் அ.ராமச்சந்திரன் வரவேற்றார். வட்டாரத் தலைவர் எம்.கமல்கிஷோர் வாழ்த்துரையாற்றினார். பொருளாளர் எஸ்.பாலநாகசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior