உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

மாவட்ட அளவிலான பைக்கா போட்டி: நாளை கடலூரில் துவக்கம்

கடலூர்:

             மாவட்ட அளவிலான பைக்கா திட்ட விளையாட்டுப் போட்டிகள் நாளை மற்றும் 29ம் தேதிகளில் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:

                மத்திய அரசின் பைக்கா திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நாளை 28, 29ம் தேதிகளில் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது.வாலிபால், கால்பந்து, கபடி, கூடைப்பந்து, கோ கோ, ஹாக்கி ஆகிய போட்டிகள் 28ம் தேதியும், இறகுப்பந்து, மேசைப்பந்து, பளு தூக்குதல், 100 மீ., ஓட்டம், 400, 800, 1500, 3000 மீ., "ரிலே' ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகள் 29ம் தேதியும் நடக்கிறது. போட்டிகள் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக நடத்தப்படுகிறது.

                        மாவட்ட அளவில் நடத்தப்படும் இந்த போட்டிகளுக்காக கடந்த 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஒன்றிய அளவில் போட்டிகள் நடத்தப்பட் டுள்ளது. அதில் தடகள போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களும், குழுப் போட்டிகளில் சிறந்த வீரர்களையும் தேர்வு செய்து ஒன்றியம் சார் பில் கலந்து கொள்ளலாம். போட்டியில் 16 வயதிற் குட்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

                  பங்கேற்க விரும்புவோர் அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஒன்றிய அளவில் விளையாட்டுப் போட்டி நடத்திய பள்ளி தலைமை ஆசிரியரின் கையெழுத்துடன் போட்டி துவக்க நாளன்று ஒப்படைக்க வேண்டும்.ஒன்றிய அளவில் நடத்தப்படாத கூடைப்பந்து, ஹாக்கி, மேசைப் பந்து, இறகுப் பந்து, பளு தூக்குதல் ஆகிய போட்டிகளுக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த 16 வயதிற்குட்பட்டவர்களை போட்டிக்கு ஒருவரை தேர்வு செய்து பள்ளி மாணவர் எனில் தலைமை ஆசிரியரிடமும், மற்றவர்கள் ஊராட்சி தலைவரிடம் விண்ணப்பத்தில் கையெழுத்து பெற்று அனுப்பி வைக்க வேண்டும்.
 
                        போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு 150 ரூபாயும், இரண்டாம் பரிசு 100 ரூபாய், மூன் றாம் பரிசு 75 ரூபாய் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மாவட்ட அளவிலான இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கும், அதில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்கும் அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior