உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

சிதம்பரம் ராகவேந்திரா கல்லூரியில் ரத்த தான முகாம்

கிள்ளை:

                சிதம்பரம் அருகே ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.

                  செஞ்சுருள், நாட்டு நலப்பணித் திட்டம், காமராஜர் அரசு மருத்துவமனை மற்றும் அரிமா சங்கம் சார்பில் நடந்த ரத்ததான முகாமை தலைவர் வெங்கடேசன் துவக்கி வைத்தார். அறக்கட்டளை தலைவர் மணிமேகலை கோவிந்தராஜன், மாவட்ட துணை நிலை ஆளுனர் சுவேதாகுமார் முன்னிலை வகித்தனர். மருத்துவ அலுவலர் நடராஜன், ரத்த வங்கி அலுவலர் சரவண குமார், காதர் அலி, செந்தில்வேலன், கல்லூரி ஆலோசகர் கனகசபை, முதல்வர் அப்துல்ரகிம், முருகப்பன் உள்ளிட்ட பலர் பேசினர். கல்லூரி மாணவர்கள் ரத்ததானம் வழங்கினர். ஏற்பாடுகளை கிளை தலைவர் தர்பாரண்யன் செய்திருந்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior