உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

கடலூர் மாவட்டத்தில் இருதய சிகிச்சைக்காக 52 சிறுவர்கள் பிரபலமருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பு

சிதம்பரம்:

              இருதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை சிகிச்சைக்காக வழியனுப்பும் விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.,பன்னீர்செல்வம் பங்கேற்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

                  கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இருதய நோயால் பாதிக்கப்பட்ட 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்க சிதம்பரம் அரசு மருத்துவமனையில் இருந்து வழியனுப்பும் விழா நடந்தது. விழாவிற்கு துணை இயக்குனர் மீரா தலைமை தாங்கினார். பொது சுகாதார இயக்குனர் பொற்கை பாண்டியன் முன்னிலை வகித்தார். அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் பங்கேற்று இருதய அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறுவர்களை சென்னை மருத்துவமனைகளுக்கு கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தார்.

அப்போது எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியது: 

                     தமிழகம் முழுவதும் இருதய நோயால் பாதிக் கப்பட்ட பள்ளி சிறுவர்களுக்கு கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் மூலம் படிப்படியாக உயிர் காக்கும் இருதய அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட 15 வயதிற்குட்பட்ட 3 ஆயிரத்து 264 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளது. மேலும் ஆயிரத்து 22 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

                இதில் கடலூர் மாவட்டத்தில் 113 சிறுவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர். முதல் கட்டமாக இன்று மாவட்டத்தில் இருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட 52 பேர் அறுவை சிகிச்சைக்காக குலோப், செட்டிநாடு, பிம்ஸ் போன்ற 8 பிரபல மருத் துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர். தொடர்ந்து இன்னும் 2 மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் அறுவை சிகிச்சை செய்யப்படும்.இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior