உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

திட்டக்குடியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பிறந்த நாள் விழா

திட்டக்குடி:

            திட்டக்குடியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 53வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

             பேரூராட்சி சேர்மன் மன்னன் தலைமையில் வதிஷ்டபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 150 மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. ஒன்றிய துணை செயலாளர் அண்ணா துரை, கவுன்சிலர்கள் ராஜேந்திரன், செல்வகுமார், முத்துவேல், செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர். நகர அண்ணா துரை நற்பணி மன்றம் சார்பில் முன்னாள் சேர்மன் தேவேந்திரன் தலைமையில் முன்னாள் நகர செயலாளர் ராவணன் முன்னிலையில் அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு பால், பிரட், பழம் வழங்கப்பட்டது. கொடிக்களம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரேஷன் கடை தொ.மு.ச., மாநில துணைத்தலைவர் தலைமையில் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

               இதில் ஊராட்சி தலைவர் உமாராணி, அரசு வக்கீல் புகழேந்தி உட்பட பலர் பங்கேற்றனர். தொளார் ஊராட்சியில் தி.மு.க., மாவட்ட பிரதிநிதி மதியழகன் தலைமையில், ஊராட்சி தலைவர் ஜெயமணி முன்னிலையில் நடந்தது. பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் நகர செயலாளர் குமரவேல் தலைமையில், இளைஞரணி அமைப்பாளர் காதர் முன்னிலையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மதியழகன், கவுன்சிலர் அருள், நிர்வாகிகள் ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, மனோகரன், பாபு, ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior