உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் சார்பில் ஆகஸ்ட் 30 முதல் பாதுகாப்பு வார விழா

நெய்வேலி:

            நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் பாதுகாப்பு வார விழா இந்த ஆண்டு ஆகஸ்ட் 30 முதல் தொடங்கவுள்ளது. 

                   மத்திய பொதுத் துறை நிறுவனமான என்எல்சி நிறுவனம் தொழிலாளர்களின் பாதுகாப்பான பணியை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு வார விழாவை விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டுக்கான பாதுகாப்பு வார விழாவுக்கான ஏற்பாடுகள் நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் ஹாலில் நடைபெற்று வருகிறது. லிக்னைட் ஹால் வளாகத்தில் நிறுவனத்தின் ஒவ்வொரு துறை சார்பிலும் பிரம்மாண்டமான கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior