உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

வடக்கு சென்னிநத்தம் பஸ் நிறுத்தம்:கலெக்டருக்கு பொதுமக்கள் மனு

சேத்தியாத்தோப்பு:

           சேத்தியாத்தோப்பில் வடக்கு சென்னிநத்தம் சாலை சந்திப்பில் வேகத் தடை அமைக்கவும் பஸ் நிறுத்தம் உருவாக்கக் கோரியும் பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சேத்தியாத்தோப்பு வடக்கு சென்னிநத்தம் பகுதி பொதுமக்கள் சார்பில் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு:

            சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு சென்னிநத்தம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் ஊராட்சி சாலையும், நெடுஞ்சாலையும் சேருமிடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. சாலை சந்திக்கும் பகுதியில் வடபுறம் மற்றும் தென்புறம் பகுதியில் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.மேலும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பஸ் ஏறவும், இறங்கவும் 2 கி.மீ., தூரம் செல்ல வேண்டி உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் பஸ் நிறுத்தம் உருவாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பபட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior