உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 06, 2010

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இள வட்டம் 2010 பரிசளிப்பு விழா

சிதம்பரம் :  

             சிதம்பரம் அண்ணாமலைப் பல்லைக் கழகத்தில் செஞ்சுருள் சங்கம் இள வட்டம் 2010 சார்பில் பரிசளிப்பு விழா நடந்தது. 

               சிதம்பரம் அண்ணாமலைப் பல்லைக்கழகத்தில் துணைவேந்தர் ராமநாதன், பதிவாளர் ரத்தினசபாபதி ஆசியுடன் செஞ்சுருள் சங்கம் இளவட்டம் 2010 சார்பில்  பல்வேறுப் போட்டிகள் நடந்தது.  இதில்  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா பல்கலைக்கழக நூலக மைய அரங்கில் நடந்தது.  செஞ்சுருள் சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் வரவேற்றார். பேராசிரியர்கள் பழனியப்பன்,முத்துவீரப்பன்,செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச் சியை துவக்கி வைத்தனர்.  

                  மாவட்ட சுகாதார துணை இயக்குனர் மீரா, மாவட்ட திட்ட மேலாளர் கலைமதி, திட்ட மேலாளர் கதிரவன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். முன்னதாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற் றிப் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப் பட்டது.  நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். செஞ்சுருள் சங்க அலுவலர் ராஜா நன்றி கூறினார்.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜெயராஜ் உள்ளிட்ட குழுவினர்கள் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior