உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 06, 2010

புதுப்பேட்டை பள்ளியில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆய்வு

சிதம்பரம் : 

               சிதம்பரம் புதுப்பேட்டை  உண்டு உறைவிடப்பள்ளியில் மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆய்வு செய்தார். 

                  அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் சிதம்பரம் புதுப்பேட்டை வடக்குத் தெருவில் மாற்றுத் திறனாளிகளுக்கு உண்டு உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் 50 மன வளர்ச்சி குன்றிய பிள்ளைகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியை மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆடியபாதம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாணவர்களுக்கு சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கினார்.  அப்போது  குமராட்சி வட்டார வளமைய மேற் பார்வையாளர் சிவக்குமார், கலாவதி கலியபெருமாள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior