உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 06, 2010

கடலூர் மாவட்டத்தில் இன்று முதல் "பைக்கா' விளையாட்டுப் போட்டி


கடலூர் : 

                 கடலூர் மாவட்டத்தில் ஒன்றிய அளவிலான "பைக்கா' விளையாட்டுப் போட்டி இன்று (6ம் தேதி) துவங்குகிறது. 

இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

               அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒன்றிய அளவிலான  "பைக்கா' விளையாட்டுப் போட்டிகள் இன்று 6ம் தேதி துவங்குகிறது. 6, 7 தேதிகளில் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியிலும், 9, 10 தேதிகளில் இருப்பு அரசு மேல்நிலைப் பள்ளி, புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது. 

                11 மற்றும் 12ம் தேதிகளில் காட்டுமன்னார்கோவிலுக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 13, 14 தேதிகளில் பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது. 16, 17 தேதிகளில் தொழுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வடக்குப்பாளையம் தூய இருதய மேல் நிலைப் பள்ளியிலும், 18, 19 தேதிகளில் காடாம்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 19, 20 தேதிகளில் எறையூர் அருணா மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது. 20, 21 தேதிகளில் நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 21, 22 தேதிகளில் புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் போட்டிகள் நடக்கிறது. 

                    இப்போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர், போட்டி நடக்கும் பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் அல்லது ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior