உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 06, 2010

கடலோரக் காவல் படைக்கு உதவ வயர்லெஸ் கருவிகள் தேவை: மீனவர்கள் கோரிக்கை

கடலூர்:

            கடலோர பாதுகாப்பில் போலீஸôருக்கும் கடலோரக் காவல் படையினருக்கும் உதவுவதற்கு மீனவர்களுக்கு வயர்லெஸ் கருவிகள் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

            மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு, கடலோரப் பாதுகாப்பில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கடலோர கிராமங்களில் தனியாகக் கணக்கெடுப்பு நடத்தி, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. எனவே வங்கக் கடலிலும், கடற்கரை கிராமங்களிலும், சந்தேகப்படும் நிலையில் நபர்களின் நடமாட்டம் இருந்தால் போலீஸôருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கடலோர கிராமங்களில் விழிப்புணர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

              இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கடலூர் துறைமுகம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கூட்டத்தில் கடலூர் டி.எஸ்.பி. மகேஸ்வரன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் பேசிய மீனவர் கிராமப் பிரதிநிதிகள், புதுவை மாநிலத்தில் உள்ள மீனவர்களுக்கு வயர்லெஸ் கருவிகள் வழங்கப்பட்டு இருப்பதுபோல், கடலூர் மாவட்ட மீனவர்களுக்கும், வயர்லெஸ் கருவிகள் வழங்க வேண்டும். அதன்மூலம் போலீஸôர் எதிர்பார்க்கும் தகவல்களை உடனுக்குடன் வழங்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior