உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 06, 2010

சிதம்பரம் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வர்த்தக சங்கத்தினர் கலெக்டருக்கு மனு

சிதம்பரம் : 

              சிதம்பரம் அடுத்த அண்ணாமலைநகர் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி  கலெக்டருக்கு வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.  

இது குறித்து அண்ணாமலை நகர் வர்த்தக சங்கத் தலைவர் அருள், செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் ராமதாஸ் உள்ளிட்ட குழுவினர்கள் நேற்று சிதம்பரத்தில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு:  

               அண்ணாமலை நகர் பகுதியில் மக்கள் தொகை நிறைந்த குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகம்  உள்ள பகுதியாக உள்ளது.  எப்போதும் மக்கள் கூட் டம் அதிகமாக இருக்கும். தற்போது நகரில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல்  இப்பகுதியினர் மிகுந்த பாதிப்படைந்து வருகின்றனர்.  அத்துடன் பல்வேறு விபத்தில் பாதிக்கப்படுகின்றனர்.   ரயில்வே மேம்பாலத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க மின் விளக்கு அமைக்கவும், மேம்பாலத்தில் போக்குவரத்துடன் கூடிய ரவுண்டானா மற்றும் போலீஸ் குடை, மேம்பாலத்தில் இருந்து மாணவர் ராஜேந்திரன் சிலை வரை கழிவு நீர் கால்வாய் வசதி ஏற்படுத்தவும், விபத்து நடக்கும் பகுதியில் வேகத் தடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior