உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 06, 2010

கடலூர் கப்பல் ஊழியர் வீட்டில் ரூ. 4 லட்சம் நகைகள் கொள்ளை

கடலூர்:

            கடலூரில் கப்பல் ஊழியர் வீட்டில் இரும்பு கிரில்களைப் பெயர்த்து எடுத்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றுவிட்டனர்.

              கடலூர் சிவானந்தபுரம் ராமநாதன் நகரைச் சேர்ந்தவர் குமரேசன் (49). கப்பலில் வேலை செய்து வருகிறார். வீட்டில் அவரது மனைவி தமிழ்ச்செல்வி (38) 2 மகள்களுடன் வசித்து வருகிறார். வியாழக்கிழமை காலை தமிழ்ச்செல்வி எழுந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் பணம் திருட்டுப் போயிருந்தன. வீட்டின் பின்பகுதியில் உள்ள கண்ணாடி ஜன்னலில், இரும்பு கிரில்களைப் பெயர்த்து எடுத்து திருடர்கள் உள்ளே நுழைந்து நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்று விட்டனர். கடலூர் முதுநகர் போலீஸôர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior