உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 24, 2010

குண்டு உப்பலவாடியில் ரூ.5.59 கோடியில் உயர்மட்ட பாலம்


கடலூர் : 

            கடலூர் குண்டு உப்பலாவடி - கண்டக்காடு இணைக்கும் வகையில் உப்பனாற்றில் 5.59 கோடி ரூபாய் மதிப்பில் உயர் மட்ட பாலம் கட்டுவதற் கான பூமி பூஜை  நடந்தது. 

               கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., அய்யப்பன் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., நடராஜன் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் வெங்கடேசன், உதவிக் கோட்டப் பொறியாளர் நடனசபாபதி, முன்னாள் நிலவள வங்கிச் சேர்மன் ஜெயபால், ஊராட்சி தலைவர்கள் குப்புசாமி, லட்சுமணன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கஜேந்திரன், லட்சுமணன், மணிமொழிரவிராஜ், கவுன்சிலர் இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சின் போது கலெக்டர் சீத்தாராமன் கூறுகையில், 

                "கடந்த மழைக் காலத்தின்போது ஏற்பட்ட வெள்ளத்தால் இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் இந்தப் பகுதியில் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அரசு 5.59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உப்பனாற்றின் இடையே பாலம் கட்ட அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து பணிகள் நடக்கவுள்ளது. 125 மீ., நீளமும், 12  மீ., அகலமும் கொண்ட பாலத்தில் இரண்டு பகுதிகளிலும் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் நடைபாதையும் அமைக்கப்படவுள்ளது. திட்டம் தொடங்கி 15 மாதங்களில் பணிகள் முடிக்கப்பட வேண்டும்' என தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior