உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 24, 2010

டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்படும் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உறுதி

பண்ருட்டி : 

              போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள  டிஜிட்டல் போர்டுகள் அகற்றப்படும் என எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ்  கூறினார். பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ்  கூறியது :- 

            பண்ருட்டி சப் டிவிஷனில் 7 சதவீதம் அளவில் தான் போலீசார் எண்ணிக்கை குறைவாக உள்ளனர். மற்ற சப் டிவிஷன்களில் 20 சதவீதம் அளவில் பற்றாக்குறை உள்ளது. பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம்  செயல்பட போலீசார் நியமிக்கப் படுவர். போக்குவரத்து பிரிவில்  தற்போது சிதம்பரம், விருத்தாசலம், வடலூர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது.
 
               விரைவில் பண்ருட்டியிலும் போக்குவரத்து சீரமைக்கப்படும். போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபடாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். டிஜிட்டல் பேனர்களால் விபத்துகள் ஏற்படுகிறது. போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள டிஜிட்டல் போர்டுகள் அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. விரைவில் அகற்றப்படும். உடன் டி.எஸ்.பி., பிரசன்னகுமார், மகளிர் இன்ஸ்பெக்டர் ஆலீஸ் மேரி, சப் இன்ஸ்பெக்டர் பவானி உள்ளிட்டோர் இருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior