உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 24, 2010

காலமானார் தமிழறிஞர் இரா.சாரங்கபாணி


சிதம்பரம்:

            முதுபெரும் தமிழறிஞர் முனைவர் இரா.சாரங்கபாணி (85) திங்கள்கிழமை (ஆகஸ்ட் 23) காலமானார். இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை சிதம்பரம் மாரியப்பாநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

               சிதம்பரத்தை அடுத்த தேவன்குடி கிராமத்தில் 21-3-1925 அன்று பிறந்தவர் இவர். அண்ணாருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், அந்துவன் என்ற மகனும் உள்ளனர். இரா.சாரங்கபாணி 1949-82 வரை 32 ஆண்டுகள் அழகப்பா கல்லூரியில் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும், உயர் ஆராய்ச்சி மைய நெறியாளராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1982-86 வரை 4 ஆண்டுகள் துறைத் தலைவராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1988-94 வரை சிறப்பு நிலைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 

                     இவருக்கு தமிழகஅரசின் திருவள்ளுவர் விருது 1998-ல் முதல்வர் மு.கருணாநிதியால் வழங்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு உரை வேற்றுமை 3 தொகுதிகளாக வெளியிட்டவர். சங்கப் பாடல்களுக்கும், திருக்குறள் ஆய்வுக்கும் உலகளவில் பேரறிஞராக மதிக்கப்பட்டவர். நெய்வேலி புத்தகக் கண்காட்சி குழுவினரும், என்எல்சி நிறுவனமும் இணைந்து சிறந்த எழுத்தாளர் விருது அளித்து பாராட்டியுள்ளன. சிதம்பரத்தை அடுத்த சேத்தியாத்தோப்பு டி.ஜி.எம். மேல்நிலைப் பள்ளிக்குழுத் தலைவராகவும் இருந்து வந்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior