உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 24, 2010

விருத்தாசலம் நகரில் நடைபாதை பணிக்கு பூமி பூஜை

விருத்தாசலம் : 

              விருத்தாசலம் கடை வீதி பகுதியில் நடை பாதை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நடந்தது. 

            விருத்தாசலம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், நகரை அழகுபடுத்தும் வகையிலும் கடைவீதி சிக்னலில் இருந்து பழைய தபால் நிலையம் வரை சாலையின் இருபுறங்களிலும், விருத்தகிரீஸ்வரர் கோவிலின் முன்புறம் உள்ள சாலையின் ஒரு புறத்திலும் வடிகாலுடன் கூடிய நடை பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. 

               இதற்காக நெடுஞ் சாலைத் துறை சார்பில் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 25 லட்சம் ரூபாயும், நகராட்சி சார் பில் 13 லட்சம் என 38  லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த பணிக்கான பூமி பூஜை விழா நடந்தது. சேர்மன் முருகன் தலைமை தாங்கினார். நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் தில்லைகோவிந் தன், கமிஷனர் திருவண்ணாமலை முன்னிலை வகித்தனர். தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி, கவுன்சிலர்கள் அரங்கபாலகிருஷ்ணன், ராமு, கர்ணன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior