கடலூர் : 
             மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் அண்ணாமலை பல்கலைக் கழக அணி வெற்றி பெற்றது. 
             மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட அள விலான போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் பல்வேறு அணிகள் பங்கேற்றன. அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக அணி முதல் பரிசை வென்றது. இரண்டாம் பரிசை ஆண்கள் பிரிவில் கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி அணியும், பெண்கள் பிரிவில் திருப்பாதிரிப்புலியூர் மகளிர் மேல்நிலைப் பள்ளி அணியும் பெற்றன. 
                   இதன் பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட கைப்பந்து கழக புரவலர் வக்கீல் பிரேம்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சாமிக்கண்ணு, கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.  விழாவில் டாக்டர் கணபதி, மாவட்ட கபடிமற்றும் ஹாக்கி சங்க செயலளர் ராமமூர்த்தி, நடுவர்கள் பாபு, கார்த்திக், சங்கர், திருஞானம் பங்கேற்றனர். கைப்பந்து கழக செயலாளர் அசோகன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக