உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 21, 2010

மாநில அளவிலான கால்பந்து போட்டி: என்எல்சி பள்ளி சாம்பியன்

நெய்வேலி:

             ஏற்காட்டில் நடந்த மாநில அளவிலான கால்பந்து போட்டியில் என்எல்சி ஆண்கள் மேநிலைப் பள்ளி அணியினர் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

           சகோதரர் அந்தோணி படுவா 18-வது நினைவு சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி அண்மையில் ஏற்காட்டில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலிமிருந்து 12 அணிகள் பங்கேற்றன. இப்போட்டியின் இறுதிப் போட்டியில் மதுரை அமெரிக்கன் காலேஜ் மேநிலைப் பள்ளியுடன், என்எல்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணியினர் மோதினர். ஆட்டம் முடியும் வரையில் இரு அணிகளும் கோல் போடாததால், டை-பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. 

                இதில் 6-5 என்ற கணக்கில் என்எல்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணியினர் வென்று கோப்பையைக் கைப்பற்றினர். கோப்பையை வென்ற அணியினருக்கு சர்வதேச தடகள வீரர் |10 ஆயிரம் வெகுமதி பரிசு வழங்கினார். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற என்எல்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணியினரையும், பயிற்சியாளர் ஜான்சனையும், என்எல்சி கல்வித்துறை செயலர் சுகுமார், விளையாட்டுப் பள்ளி தாளாளர் சுந்தர்ராஜன், பள்ளித் தலைமை ஆசிரியர் துரைசாமி உள்ளிட்டோர் பாராட்டினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior