உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 21, 2010

நெய்வேலி கோர்ட்டில் எஸ்.எஸ்.சந்திரன் ஆஜர்

நெய்வேலி : 

              முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் எம்.பி., நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் நெய்வேலி கோர்ட்டில் நேற்று ஆஜரானார்.

              நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகே 4.7.2007 அன்று நடந்த அ.தி.மு.க., கூட்டத்தில் முன்னாள் எம்.பி., நடிகர் எஸ்.எஸ். சந்திரன் தமிழக முதல்வரை அவதூறாக விமர்சித்து பேசினார். இதுகுறித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார், நெய்வேலி சப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
 
                   கடந்த மாதம் நடந்த வழக்கு விசாரணைக்கு எஸ்.எஸ்.சந்திரன் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி ராஜா உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் நேற்று நெய்வேலி சப் கோர்ட்டில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா, வழக்கு முடியும் வரை சம்மன் அனுப் பினால் கோர்ட்டில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க உத் தரவிட்டார். நடிகர் எஸ்.எஸ்.சந்திரனுடன் அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலார் சொரத்தூர் ராஜேந்திரன், தொகுதி செயலாளர் சிவசுப்ரமணியன், நகர செயலாளர் ரவிச்சந்திரன், வக் கீல் ராஜசேகர் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior