உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 04, 2010

பண்ருட்டி பகுதியில் செங்கல் விலை "கிடுகிடு'

பண்ருட்டி:

              பண்ருட்டி பகுதியில் செங்கல் தயாரிப்பில் மந்தம் காரணமாக செங்கல் விலை "கிடுகிடு' வென உயர்ந்துள்ளது.

             பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம், கொக்குப்பாளையம், சிறுவத்தூர், கோட்லாம்பாக்கம், ஒறையூர், அண்ணாகிராமம், கோழிப்பாக்கம், திருவதிகை, பணப்பாக்கம், வரிஞ்சிப்பாக்கம், கள்ளிப்பட்டு, திருத்துறையூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் செங்கல் சூளைகள் அதிகளவில் உள்ளது. இங்கு தயாரிக்கும் செங்கல் தினமும் சென்னை, புதுச்சேரி, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 50 லோடுகள் வரை அனுப்பப்படுகிறது. 

             ஆனால் தற்போது செங்கல் அறுக்கும் போதே (பச்சைக்கல்) திடீரென மழை பெய்வதால் பச்சைகல் முற்றிலும் வீணாகி விடுகிறது. இதனால் மழையில் பாதுகாப்பாக பயன்படுத்தும் வசதி கொண்ட சூளையினர் மட்டுமே செங்கல் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் செங்கல் உற்பத்தி குறைந்துள்ளது.

              தற்போது செங்கல் தேவை அதிகரித்துள்ள நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் மெலார் மூலம் எரிக்கப்படும் ஆயிரம் செங்கற்கள் 2,000 ரூபாயும், விறகு கட்டை மூலம் எரிக்கப்படும் கல் 2,200 ரூபாயும் விற்பனையானது. ஆனால் தற்போது மழையின் காரணமாக ஆயிரம் செங்கற்கள் 600 ரூபாய் கூடுதலாகி மெலார் மூலம் எரிக்கப்படும் செங்கற்கள் 2,600ம், விறகு கட்டை மூலம் எரிக்கப்படும் செங்கற்கள் 2,800 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior