உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 04, 2010

பண்ருட்டி நகராட்சியில் பாழாகும் குப்பை அள்ளும் வாகனங்கள் அதிகாரிகள் அலட்சியம்

பண்ருட்டி:

             பண்ருட்டி நகராட்சி குப்பை லாரிகள் பராமரிப்பின்றி வீணாகியதால் குப்பைகள் அள்ளும் பணி கடுமையாக பாதித்துள்ளது.

             பண்ருட்டி நகராட்சியில் 33 வார்டுகளில் 50 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். நகராட்சி பகுதியில் தினமும் சேரும் குப்பைகளை அகற்றுவதற்கு 33 பெண்கள் உள்ளிட்ட 120 துப்புரவு பணியாளர்கள் பணிபுரிகின்றனர். பணிகளை ஆய்வு செய்ய ஒரு துப்புரவு அலுவலர், 2 ஆய் வாளர்கள், 2 மேற்பார்வையாளர்கள் பணிபுரிகின்றனர். குப்பைகள் சேகரிக்க 33 வார்டுகளில் 50 இரும்பு தொட்டிகள் வைக் கப்பட்டுள்ளது. 

              குப்பைகள் அள்ளுவதற்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் இரண்டு டிராக் டர்கள், ஒரு லாரி, ஒரு ஈஷர் மினி லாரி, ஒரு கேண்டர் மினிலாரி, ஒரு ஃபோர் நாட் செவன் என 6 வாகனங்களும், தள்ளுவண்டிகள் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் சேகரிப்பதற்கு 30 வண்டிகள் உள்ளது. ஆனால் கடந்த இரு மாதங்களாக குப்பைகளை அகற்றுவதற்குரிய டிராக்டர், ஒரு ஃபோர் நாட் செவன் வேன் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மற்ற வாகனங்கள் பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. டிராக்டர் இழுத்துச் செல்லும் டிரெய்லர்களும் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 

                   அதிகாரிகளின் அலட்சியத்தால் நகராட்சியின் நான்கு வாகனங்களுக்கு போக்குவரத்து அதிகாரியின் தகுதிச் சான்று பெறாமல் உள்ளது. குப்பைகள் அள்ள வாகனங்கள் இல்லாததால் கடந்த ஒரு மாதமாக பல தெருக்களில் குப்பைகள் அள் ளும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. துப்புரவு ஊழியர்கள் டிராலி மூலம் குப்பைகளை அள்ளினாலும் முழுமையாக அகற்ற முடிவதில்லை. போதுமான பணியாளர்கள் இருந்தும் வாகனங்கள் இல்லாததால் பண்ருட்டி நகரம் முழுவதும் குப்பைகள் மண்டி காணப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior