உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 04, 2010

பண்ருட்டியில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

பண்ருட்டி: 

          பண்ருட்டி - விழுப்புரத்திற்கு காலை மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என நுகர்வோர் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது.

            பண்ருட்டி தாலுகா நுகர்வோர் பாதுகாப்பு சங்க ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்கத் தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். ஜோசப், வினாயகம், உமாபதி, பாபு, மதியழகன், ராதாகிருஷ்ணன் பேசினர். கூட்டத்தில் பண்ருட்டி- விழுப்புரம் வரையில் காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் செல்வதற்கு வசதியாக கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். அரசு சான்றிதழ் விரைவாக பொதுமக்களுக்கு கிடைத்திட கூடுதலாக அரசு ஊழியர்களை நியமித்திட வேண்டும், பண்ருட்டி பஜார் தபால் நிலையத்தை முன் அறிவிப் பின்றி மூடியதை திறக்க வேண்டும் உட்பட உள் ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior