உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 04, 2010

"ஆபரேஷன் ஹம்லா" நள்ளிரவில் துவங்கியது

கடலூர்:

             கடல் வழியே பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பரிசோதித்துப் பார்க்கும் வகையில் "ஆபரேஷன் ஹம்லா' நேற்று நள்ளிரவு துவங்கியது.
 
             கடல் வழியே பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய கடல் பகுதியில் அன்னிய நாட்டுப் படகுகள் மற்றும் அன்னிய நபர்களை கண்டாலோ, மீனவ கிராமங்களில் புதிய நபர்கள் நடமாட்டம் இருந்தாலோ உடன் போலீஸ் அல்லது கடலோர பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவிக்க மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.போலீஸ் மற்றும் கடலோர பாதுகாப்புப் படையினரும் இணைந்து கடலோர கிராமங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோர காவல் படையினர் நவீன படகுகள் மூலம் கடல் பகுதியை கண்காணித்து வருகின்றனர்.
 
              அன்னிய நாட்டு பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும், பயங்கரவாதிகள் வந்தால் அவர்களை எவ்வாறு மடக்கிப் பிடிப்பது என்பதை ஆய்வு செய்வதற்காக "ஆபரேஷன் ஹம்லா' நேற்று நள்ளிரவு 12 மணிக்கு துவங்கியது. இதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ போலீஸ் குழுவினர் மாறு வேடத்தில் கடல் வழியே சென்னை முதல் கன்னியாகுமரிக்குள் நாளை (5ம் தேதி) இரவு 12 மணிக்குள் ஊடுருவி சாலை வழியே மாநிலத்தின் முக்கிய பகுதிகளை சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

                             இவர்கள் கரை ஏறுவதைக் கண்காணித்து பிடிக்கும் போலீசாருக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனையொட்டி தமிழகத்தின் கடலோர கிராமங்கள் மற்றும் அதனையொட்டிய நெடுஞ்சாலைகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior