உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 04, 2010

பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையில் மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்

பண்ருட்டி: 

               பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையில் மணல் திருட்டைத் தடுக்க பொதுப்பணித் துறையினர் பாதையில் பள்ளம் தோண்டி தடுப்பு ஏற்படுத்தினர்.

              பண்ருட்டி அடுத்த அக்கடவல்லி, கண்டரக்கோட்டை, புலவனூர், மேல்குமாரமங்கலம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள தென் பெண்ணை ஆற்றில் தினமும் இரவு நேரங்களில் லாரிகளில் திருட்டு மணல் ஏற்றிச் செல்லும் சம்பவம் அதிகரித்துள்ளது. பண்ருட்டி தாசில்தாராக பாபு இருந்த போது தினமும் இரவு வருவாய்த் துறையினர் ரோந்து சென்று மணல் கடத்தலைத் தடுத்தனர்.இதனால் ஆத்திரமடைந்த மணல் கொள்ளையர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஒ., மீது லாரி ஏற்றிக் கொல்ல முயன்றனர். 

              இதனையடுத்து வருவாய்த் துறையினர் மணல் கடத்தலைத் தடுப்பதற்கு அஞ்சுகின்றனர்.இதனால் தினமும் டிப்பர் லாரிகள் மூலம் மணல் கடத்தல் சம்பவம் அதிகளவில் அரங்கேறி வருகிறது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் மணல் கடத்தலை தடுத்து நிறுத்த வருவாய்த்துறை, போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று தாசில்தார் பன்னீர்செல்வம், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் குமார், வருவாய் ஆய்வாளர் பூபாலன் ஆகியோர் கண்டரக்கோட்டை, புலவனூர் பகுதியில் மணல் கொண்டு செல்லும் பாதையில் பள்ளம் தோண்டி தடுப்பு ஏற்படுத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior