உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 19, 2010

வெள்ளாற்று வடிகாலில் மண் அரிப்பை தடுக்க ரூ.92 லட்சம் செலவில் தடுப்பணை

கிள்ளை : 

             சிதம்பரம் அருகே நவாப்பேட்டை வெள்ளாற்று வடிகாலில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் பொதுப்பணித்துறை மூலம் 92 லட் சம் ரூபாய் செலவில் தற்காலிக தடுப் பணை அமைக்கும் பணி துவங்கியது. நவாப்பேட்டை அருகில் உப்பனாற்றுப் பகுதியில் மண் அரிப்பு ஏற் பட்டு ரயில் சாலை வரை பாதிப்பு ஏற்படும் நிலையில் இருந்தது.

                     ரயில்வே அதிகாரிகள் பார்வையிட்டு இப்பகுதியில் தடுப்பணைக் கட்டாவிட்டால் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்தனர். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தற் காலிக தடுப்பு அமைக்க திட்ட மதிப் பீடு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து கலெக் டர் சீத் தாராமன், டி.ஆர்.ஓ., நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.

                 அதனைத் தொடர்ந்து 92 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிக தடுப்பணைக் கட்ட திட்டமிட்டனர். தற்போது 40 அடி ஆழம் உள்ள வெள்ளாற்றில் 600 மீட்டர் தொலைவில் பனைமரத்தை நட்டு மண் மூட்டை கொண்டு தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இதற்காக சுற்றுப்பகுதியில் இருந்து 6 ஆயிரம் பனைமரம் வாங்கி கிள்ளை ரயில் நிலையத் தில் அடுக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி மழைகாலத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior