உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 19, 2010

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு: இலவசப் பயிற்சி

              மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சியில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். 

 இது தொடர்பாக காமராஜர் பல்கலைக்கழக இளைஞர் நலத்துறை இயக்குநர் பி.செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

                    2011-ம் ஆண்டுக்கான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வில் கலந்துகொள்ள இருக்கும், அனைத்துத் தரப்பு மாணவ, மாணவியருக்கும் தமிழக அரசு சார்பில் இலவசப் பயிற்சி தரப்பட உள்ளது.  பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.  மாணவ,மாணவியர் தங்களது பெயர்,கல்வித்தகுதி, வயது, பிறந்த தேதி, சாதிச் சான்றிதழ் மற்றும் வருமானவரிச் சான்றிதழ் ஆகிய விவரங்களை வெள்ளைத் தாளில் பூர்த்திசெய்து அதனுடன் மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுயவிலாசமிட்ட 10-க்கான அஞ்சல்தலை ஒட்டிய 2 அஞ்சல் உறைகளை இணைத்து 

முனைவர் பொ. செல்லத்துரை, 
இயக்குநர் மற்றும் ஐஏஎஸ், 
ஐபிஎஸ் தேர்வு பயிற்சி ஒருங்கிணைப்பாளர், 
இளைஞர் நலத் துறை, 
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், 
பல்கலை. நகர், 
மதுரை-21 

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசிநாள் 25.10.2010. நுழைவுத்தேர்வு நாள் 29.10.2010 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior