உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 19, 2010

கடலூர் மாவட்டத்தில் இன்று "பந்த்':முக்கிய நகரங்களில் கொடி அணிவகுப்பு



கடலூர்:

                    எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள, "பந்த்' போராட்டத்தையொட்டி, கடலூர் மாவட்டத்தில் முக்கிய ஊர்களில் நேற்று மாலை போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது. என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 19ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

                    இவர்களுக்கு ஆதரவாகவும், இப்பிரச்னையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தியும் அ.தி.மு.க., - பா.ம.க., - ம.தி.மு.க., - கம்யூ., - வி.சி., உள்ளிட்ட கட்சிகள் இன்று கடலூர் மாவட்டத்தில் "பந்த்' அறிவித்துள்ளன. தீபாவளிப் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், "பந்த்' நடத்தினால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவர் என்பதால், போராட்டத்தை முறியடிக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

                        ஐ.ஜி., ரமேஷ் குடவாலா, டி.ஐ.ஜி., மாசானமுத்து ஆகியோர் மேற்பார்வையில் ஆறு எஸ்.பி.,க்கள் தலைமையில், 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள, "பந்த்' போராட்டத்தால் மக்கள் அச்சம் கொள்ளாமல் இருக்கும் பொருட்டும், பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் நேற்று மாலை போலீஸ் கொடி அணி வகுப்பு நடந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior